For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கேட்பதா?" - முஷாரப் ஆவேசம்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் கூறியதற்கு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே. காஷ்மீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது. தன் ஆக்கிரமிப்பில் உள்ளகாஷ்மீர் பகுதியையும் பாகிஸ்தான் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று(திங்கள்கிழமை) வாஜ்பாய் கூறியிருந்தார்.

எந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசினாலும் காஷ்மீர் பிரச்சனையைத்தான் பாகிஸ்தான் முன்னால் வைக்கிறது.எனவே முதலில் தான் ஆக்கிரமித்துள்ள 3ல் 1 பங்கு காஷ்மீரை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கட்டும்.அதன் பிறகு பேச்சுவார்த்தை பற்றி யோசிக்கலாம் என்றும் வாஜ்பாய் நேற்று ராஞ்சியில் நடந்த ஒருபொதுக்கூட்டத்தில் பேசினார்.

வாஜ்பாயின் இந்தப் பேச்சுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எல்லையில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக நாங்கள் எவ்வளவோ முயன்று வருகிறோம். ஆனால் எங்கள்கோரிக்கைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளாமல் தேவையில்லாமல் பேசி வருவதை நாங்கள் வன்மையாகக்கண்டிக்கிறோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

இப்போதுள்ள சூழ்நிலையில் போர் வருவதும் வராததும் இந்தியாவின் கையில்தான் உள்ளது என்று பாகிஸ்தான்வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகம்மது ஆசிஸ் கான் தெரிவித்துள்ளார்.

சார்க் மாநாட்டின்போது வாஜ்பாயிடம் முஷாரப் நட்புக் கரம் நீட்டியதையும், இந்தியாவுக்கு அவர் குடியரசு தினவாழ்த்துச் செய்தி அனுப்பியதையும் சுட்டிக்காட்டிய கான், இந்தியாவுடன் எப்போதும் நட்புடன் இருப்பதையேநாங்கள் விரும்புகிறோம் என்றார்.

ஆனால் பாகிஸ்தான் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். அனைத்துப் பிரச்சனைகளும் அமைதியானமுறையில் தீர்க்கப்படும் என்று வாஜ்பாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதைத்தான் நாங்கள் பாகிஸ்தானுக்கு மீண்டும்மீண்டும் கூறிக் கொண்டே இருக்கிறோம் என்றும் வாஜ்பாய் கூறினார்.

கொல்கத்தா தாக்குதல் குறித்து பாக்.:

இந்நிலையில் கொல்கத்தாவில் அமெரிக்க மையம் மீது தாக்குதல் தொடர்பாக 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள்கொல்லப்பட்டதை "நல்ல ஜோக்" என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஏற்கனவே கொல்கத்தா தாக்குதல் தொடர்பாக 5 வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்துள்ளதாகமுதலில் கூறிய இந்தியா, இப்போது திடீரென்று 2 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவர்களைப் பாகிஸ்தானியர்கள்என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று அந்நாட்டு தகவல் தொடர்பு செயலாளரான அன்வர் மேஹ்மூத்கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X