எல்லையில் கடும் சண்டை: 10 பாக். ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
எல்லையில் திடீர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்நடத்தியதில் 10 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
82 எம்.எம். மோர்ட்டார் குண்டுகளை வெடித்தார்கள். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்தியப் பகுதிகளில்உள்ள தகவல் தொடர்பு கோபுரங்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் இந்திய ராணுவத்தினர் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் 81 எம்.எம். மோர்ட்டார் ரககுண்டுகளை வீசினர்.
இந்தத் தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தின் 12 பதுங்குகுழிகளும் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 இந்தியப் பெண்கள் காயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications