பாக். தீவிரவாதிகள் கடத்திய அமெரிக்க நிருபர் எங்கே?
வாஷிங்டன்:
கராச்சியில் கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அமெரிக்க நிருபரை விடுவிக்க உதவுமாறுபாகிஸ்தானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது டேனியலைப் பணயக் கைதியாக வைத்துள்ள தீவிரவாதிகள், அவரது தலைமீது ஒருவர் துப்பாக்கியைவைத்து அழுத்துவது போன்ற ஒரு புகைப்படத்தை இ-மெயில் மூலம் "வால் ஸ்ட்ரீட்" பத்திரிக்கைக்குஅனுப்பியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தலிபான்கள் மற்றும் அல்-காய்தாவினரை மனிதாபிமானமில்லாமல் அமெரிக்கா நடத்திவருகின்றனர். அவர்களை ஒழுங்காக நடத்தினால், நாங்களும் டேனியலை மரியாதையாக நடத்துவோம் என்றும்அந்த இ-மெயிலில் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
"பாகிஸ்தான் கெளரவத்தை மீட்கும் தேசிய இயக்கம்" என்று தீவிரவாதிகள் தங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கியூபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலிபான்கள், அல்-காய்தாவினர் மற்றும் பாகிஸ்தானியர்களை விடுவிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும் அமெரிக்க ராணுவத்தால் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதரான அப்துல் சலாம்சயீப்பை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அத்தீவிரவாதிகள் கோரியுள்ளனர்.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏயின் ஏஜென்டாகத்தான் டேனியல் செயல்படுகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் கடத்தப்பட்ட நிருபரை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான்அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக முஷாரப்பும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டேனியலைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக, அமெரிக்க பெடரல்போலீசார் இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனாலும் டேனியல் எங்கே இருக்கிறார் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை என்று பாகிஸ்தான் போலீசார்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications