கிரிக்கெட்: வென்றது இங்கிலாந்து
டெல்லி:
டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த பரபரப்பான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியைஇங்கிலாந்து அணி இரண்டே ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
டாஸ் வென்ற இந்திய அணியினர் எதிரணியினரை பேட் செய்யுமாறு அழைத்தனர்.
களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டிரஸ்கோத்திக்கும் நைட்டும் முதல் 11ஓவர்களுக்கு நிதானமாக விளையாடினர்.
ஆனால் 12வது ஓவரில் அகர்கரின் பந்து வீச்சுக்கு டிரஸ்கோத்திக் (35 ரன்கள்) பலியானார்.
அதன் பிறகு நைட்டுடன் ஜோடி சேர்ந்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹூசைன். இருவரும் இந்தியஅணியின் பந்துகளைச் சிதறடித்தனர்.
தங்கள் அணியின் ஸ்கோர் 168ஐ எட்டும் வரை அவர்கள் களத்திலிருந்தனர். பின்னர் 49 ரன்கள் எடுத்த நிலையில்ஹூசைன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த பிளின்ட்டாப்பும் நைட்டும் சேர்ந்து 80 ரன்கள் எடுத்தனர். அப்போது நைட் 104 ரன்கள் எடுத்தநிலையில் அகார்கரால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
கடைசியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களையும் ஆடி முடித்து, 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 272 ரன்களைஇந்திய அணிக்கு இலக்காக வைத்தது.
அகார்கருக்கு 2 விக்கெட்டுகளும் ஸ்ரீநாத்துக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் தலா ஒரு விக்கெட்டும் கிடைத்தன.
இந்தக் கடுமையான இலக்கை நோக்கிப் போராடுவதற்காக இந்தியாவும் பின்னர் களமிறங்கியது.
ஆனால் 5வது ஓவரிலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான டெண்டுல்கர் 18 ரன்களை மட்டுமே எடுத்துஅவுட்டானார். அப்போதே இந்தியாவின் வெற்றிக் கனவையும் இந்திய ரசிகர்கள் தாங்களாகவே கலைத்துக்கொண்டனர்.
ஆனால் பின்னர் வந்த அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ரசிகர்களுக்குவிருந்தாக்கினார். மொத்தம் 95 பந்துகளைச் சந்தித்த கங்குலி, 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 74ரன்களைக் குவித்தார்.
அவருக்குப் பின் வந்தவர்களில் கயீப் மட்டும் 46 ரன்களை எடுத்தார். மற்றவர்கள் மடமடவென்று அவுட் ஆகவேஇந்திய அணியினருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பதற்றம் பற்றிக் கொண்டது.
ஆனால் பதற்றமில்லாமல் ஆடிய அகார்கர் கடகடவென்று பவுண்டரிகளை அடித்ததையடுத்து, ஒரு கட்டத்தில்இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையும் வந்தது.
ஆனாலும் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை முடிந்த அளவுக்கு விரட்டிய அகார்கரால் (24 பந்துகளில் 36 ரன்கள்)272ஐ எட்ட முடியாமல் போயிற்று. கடைசிப் பந்தில் 5 ரன்களை எடுத்தால்தான் வெற்றி என்ற நிலையில் 2 ரன்களைமட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.
இதனால், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டிய இந்திய அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தது.
இந்தியாவின் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து அணியின் கைல்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications