சீன உதவியுடன் தயாராகும் பாகிஸ்தான் ஏவுகணைகள்
வாஷிங்டன்:
சீனாவின் உதவியுடன் ஷகீன் மற்றும் ஹைதர் ஆகிய ஏவுகணைகளை பாகிஸ்தான் தயாரிக்க ஆரம்பித்துவிட்டதாகசி.ஐ.ஏ. கண்டுபிடித்துள்ளது.
ஷகீன்-1, ஹைதர்-1 ஆகிய ஏவுகணைகளை பாகிஸ்தான் இதுவரை சோதனையிட்டுத் தான் வந்தது. இப்போது இந்தசோதனைகள் முடிந்து ஏவுகணைத் தயாரிப்புப் பணியை ஆரம்பித்துள்ளது. இதில் சீனாவின் பங்கு மிகப் பெரியது.முழுக்க முழுக்க சீனாவின் உதவியுடன் தான் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
எஸ்.ஆர்.பி.எம். எனப்படும் குறைந்த தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுவருகின்றன. இந்த ஏவுகணைகள் திட எரிபொருளைக் கொண்டு இயங்கும்
மேலும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஷகீன்-2 ஏவுகணைத் தயாரிப்பிலும் சீனாவின் உதவியை பாகிஸ்தான்நாடியுள்ளது. இந்த ஏவுகணைக்கான இரு மோட்டர்களைத் தயாரிக்க சீனா உதவ உள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பிலும் பாகிஸ்தானுக்கு சீனா உதவி வருகிறது. இதற்குத் தேவையான கருவிகளை ஐராப்பியநாடுகளில் பாகிஸ்தான் வாங்கி வருகிறது.
பிரான்சிடம் இருந்து மிராஜ்-3 ரக போர் விமானங்கள் வாங்கவும் சீனாவிடம் இருந்து எப்-7 ரக போர் விமானங்கள்வாங்கவும் பாகிஸ்தான் பேச்சு நடத்தி வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு அளவில் ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும் சி.ஐ.ஏ.கூறியுள்ளது. அணு ஆயுதங்கள் தயாரிக்க ரஷ்யா உதவி வருகிறது. சில ஐரோப்பிய நாடுகளும் இதில்இந்தியாவுக்கு உதவி வருகின்றன.
இந்தியாவுக்கு அணு சக்தியில் இயங்கும் நீர் மூழ்கிகளை வழங்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக சி.ஐ.ஏ.கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications