For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு ஈ-மெயில் கொலை மிரட்டல்:2 வாலிபர்கள் கைது- 40 பேரிடம் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

ஜெயலிதாவுக்கு கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக நாகர்கோவிலில் 40 பேரிடம் போலீசார் விசாரணைநடத்தியுள்ளனர்.

இதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறிய 2 வாலிபர்களை காவலில் வைத்துள்ளனர். அவர்களிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு புதுவையில் இருந்து ஒரு கொலை மிரட்டல் ஈ-மெயில் வந்தது. தமிழகபுரட்சிப் படை என்ற பெயரில் இந்த மிரட்டல் வந்தது. ஆனால், அது தொடர்பாக முழு விசாரணை நடத்தியும்அப்போது யாரும் கைது செய்யப்படவில்லை.

அதே போல சில தினங்களுக்கு முன் மீண்டும் ஒரு மிரட்டல் மெயில் வந்தது. அதில் ஜெயலலிதாவையும்,கல்வியமைச்சர் தம்பிதுரையையும் வரும் 28ம் தேதிக்குள் கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மெயில் நாகர்கோவிலில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.உடனயாடியாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ககனதீப்சிங் பேடியும் போலீசாரும் விசாரணை நடத்தினர்.இதில் நாகர்கோவிலில் 2 பிரெளசிங் சென்டர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த இரு சென்டர்களும் மூடப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் ஒரு சென்டருக்கு சீல்வைக்கப்பட்டது. இப்போது இரண்டாவது சென்டருக்கும் சீல் வைக்கப்பட்டு கம்யூட்டர்களும் பறிமுதல்செய்யப்பட்டுவிட்டன.

இந்த சென்டர்களில் ப்ரெளசிங் செய்ய வந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதில் 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவர்களை போலீசார் தங்கள் காவலில் வைத்துவிசாரித்து வருகின்றனர். மேலும் பல ப்ரெளசிங் சென்டர்களிலும் விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X