அயோத்தி விவகாரம்: காஞ்சி சுவாமிகளுடன் பெர்னாண்டஸ் ரகசிய ஆலோசனை
காஞ்சிபுரம்:
அயோத்தி விவகாரம் தொடர்பாக ஜயேந்திரர் சுவாமிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் ரகசிய ஆலோசனை நடத்தினார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நேற்று (சனிக்கிழமை) சிறப்பு விமானம் மூலம் திடீரென்று சென்னை வந்தார்பெர்னாண்டஸ்.
பயணிகள் வழக்கமாக வெளியேறும் பாதையில் செல்லாமல் வேறொரு வழியாக விமான நிலையத்தை விட்டுவெளியேறிய பெர்னாண்டஸ், யாருக்கும் தெரியாமலேயே பாதுகாப்புத் துறையின் சிறப்பு காரில் ஏறி நேராகக்காஞ்சிபுரம் சென்றார்.
அயோத்தியில் கோவில் கட்டியே தீருவோம் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தீவிரத்தையடுத்து, இவ்விஷயத்தில்ஜயேந்திர சுவாமிகளின் உதவியை நாடுவதற்காக பெர்னாண்டசை பிரதமர் வாஜ்பாய்தான் தூதராகஅனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பெர்னாண்டஸ் இப்படி திடுதிப்பென்று உளவுத் துறையினருக்கும் தெரியாமல்வந்து சேர்ந்ததால், அவர்கள் பெரிதும் குழப்பம் அடைந்தனர்.
பெர்னாண்டஸ் சென்ற காருடன் ஒரே ஒரு கார் மட்டுமே சென்றது. எனினும் அவருடைய வருகையை அறிந்தபிறகு, காஞ்சிபுரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று காலை 11.45 மணிக்கு சங்கர மடத்தை அடைந்த பெர்னாண்டஸ், சுமார் ஒரு மணி நேரம் ஜெயேந்திரசுவாமிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நேற்று மாலையே பெர்னாண்டஸ் டெல்லிக்குச் சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications