விவசாயிகளுக்காக நிவாரணம் கேட்கிறார் இளங்கோவன்
சென்னை:
மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகக் கரையோர மாவட்டங்களில் கடந்த 3தினங்களாக கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி டெல்டாப் பகுதியில் பலத்த மழைப் பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளின் நெற்பயிர்களபாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஏற்கனவே அறுவடை செய்த நெல்லை அரசு இதுவரை கொள்முதல் செய்யாததாலும் விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு உடனடியாக நிவாரணம்வழங்க வேண்டும் என்று இளங்கோவன் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications