கண்ணகி சிலை: உணர்ச்சிமிக்க தமிழர்களுக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை:
யார் யாரெல்லாம் உணர்ச்சிமிக்க தமிழர்களோ, யார் யாரெல்லாம் தனது அம்மா, அப்பாவை தமிழில்அழைக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் கண்ணகி சிலை நிறுவும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மணவழகர் மன்றத்தின் 45வது முத்தமிழ் ஆண்டு விழா சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) நடந்தது.மணவழகர் மன்ற காப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட கருணாநிதிபேசும்போது கூறியதாவது:
தமிழ் இனம் இன்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள முடியாத அவல நிலையில் உள்ளது. தமிழ்கலாச்சாரத்தை அழிப்பதற்கான போராட்டம் தற்போது தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்று தான் கண்ணகி சிலை அகற்றம். அந்த சிலை இப்போது எங்கு உள்ளது? போக்குவரத்து இடைஞ்சல்,மழை வரவில்லை என்று சாக்கு போக்கு சொல்லி வருகின்றனர்.
கண்ணகி சிலை அருங்காட்சியத்தில் உள்ளதாக சொல்கின்றனர். அது அங்குள்ளதா அல்லது தோட்டத்துபடிக்கல்லாக உள்ளதா என்று தெரியவில்லை. கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவ போராட வேண்டும்.
யார் யாரெல்லாம் உணர்ச்சிமிக்க தமிழர்களோ, யார் யாரெல்லாம் தனது அப்பா, அம்மாவை தமிழில்அழைக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் கண்ணகி சிலை நிறுவும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
கண்ணகி சிலை அமைக்க உங்கள் அனைவரோடும் கலந்து பேசி நாள் குறிக்கப்படும் என்று கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications