அமைச்சர் தளவாய் சுந்தரத்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

தேனி:

ஆண்டிப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் நெஞ்சு வலிகாரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தளவாய் சுந்தரம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குள் அடங்கியுள்ள குன்னூர், அம்மாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில்திங்கள்கிழமை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

திங்கள்கிழமை இரவு ஜி. உசிலம்பட்டியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஆண்டிப்பட்டிக்குத் திரும்பினார்.அங்கு இரவு தங்கினார்.

மறுநாள் அதிகாலை அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் தளவாய் சுந்தரம்,தேனி அருகேயுள்ள பழனிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அமைச்சர் நலமுடன் இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தளவாய் சுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும் ஆண்டிப்பட்டிதொகுதியில் பிரச்சாரத்திற்காக முகாமிட்டுள்ள முதல்வர் பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுநலம் விசாரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+