அதிரடிப் படையினருடன் நிருபர்களும் காட்டுக்குள் செல்ல நெடுமாறன் யோசனை
சென்னை:
அதிரடிப் படையினர் தங்களுடன் பத்திரிக்கை நிருபர்களையும் காட்டுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் யோசனை கூறியுள்ளார்.
இன்று நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் நடமாடுவதாகக் கூறப்படும் காட்டுப் பகுதிக்குள் உள்ள கிராமங்களில் உள்ள பெண்களிடம் அதிரடிப்படை போலீசார் அத்துமீறி நடப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்களுடன் பத்திரிக்கை நிருபர்கள் அனுமதிக்கப்பட்டதைப் போலவே,அதிரடிப் படை வீரர்களுடனும் நிருபர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஆனால் உரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்குத் தராமல் தமிழக அரசு இன்னும் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக அவர்களுக்கு நிவாரணத் தொகையை தமிழக அரசு தரவேண்டும் என்றார்நெடுமாறன்.












Click it and Unblock the Notifications