"அம்மாவை முதல்வராக அனுப்புங்கள்": ஆண்டிப்பட்டியில் பன்னீர் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதி மக்களே, புரட்சித் தலைவி அம்மா அவர்களை முதல்வராக தேர்வு செய்து சென்னைகோட்டைக்கு அனுப்புங்கள் என்று முதல்வர் பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்தார்.

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பன்னீர்செல்வம் பிரசாரம்செய்கிறார். இதற்காக ஆண்டிப்பட்டி தொகுதிக்கு அவர் சென்றுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அம்பேத்கர் நகர் பகுதியில் அவர் பிரசாரத்தைத் தொடங்கினார். தன்னுடையபிரச்சாரத்தில் பன்னீர் கூறியதாவது:

ஜெயலலிதாவை முதல்வராக தேர்வு செய்யும் பாக்கியம் ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்குக் கிடைத்துள்ளது.அதை ஆண்டிப்பட்டி மக்கள் தவற விடமாட்டார்கள்.

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் உச்சகட்டமான நிலையை அடைந்தது.ஆனால் கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலோ மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. ஏழை, எளிய மக்களின்நலனுக்காக கருணாநிதி அரசு எதையுமே செய்யவில்லை.

அதிமுகவையும், ஜெயலலிதாவையும் ஒழிப்பதிலேயே கருணாநிதி ஆர்வம் காட்டினார். பொய்யான வழக்குகளைப்போட்டு இப்போது முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு நிற்கிறார்.

கருணாநிதியின் சதி காரணமாகவே கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியவில்லை.அவர் போட்டியிட்டிருந்தால் இந்த இடைத் தேர்தலே வந்திருக்காது. இருப்பினும், முன்பை விட அதிசுத்தமாகஆண்டிப்பட்டிக்கு ஜெயலலிதா திரும்பி வந்துள்ளார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை முதல்வராக தேர்வு செய்தது ஆண்டிப்பட்டி. இப்போதும் புரட்சித் தலைவன்வாரிசான புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களை முதல்வராக தேர்வு செய்து கோட்டைக்குஅனுப்புங்கள் என்று பிரச்சாரம் செய்தார் பன்னீர்செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+