ராமர் கோவில் விவகாரம்: காஞ்சி சுவாமிகளுடன் அசோக் சிங்கால் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.எச்.பி.) தலைவரான அசோக்சிங்கால் இன்று (புதன்கிழமை) காஞ்சி சுவாமிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வரும் மார்ச் 12ம் தேதியன்று எப்படியும் ராமர் கோவிலைக் கட்ட ஆரம்பித்து விடுவோம் என்று வி.எச்.பியினர் கூறிவருகின்றனர்.

ஆனால் பாஜகவினர் இதற்குத் தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருவதோடு நில்லாமல், சர்ச்சைக்கு அப்பாற்பட்டநிலத்தை வி.எச்.பியிடம் தருவதற்கு மறுத்தும் வருகின்றனர்.

இதற்கிடையே நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் வி.எச்.பியினர்ஆலோசனை நடத்தி, ஆதரவையும் கோரி வருகின்றனர்.

அதன்படி இன்று காஞ்சிபுரம் வந்த அசோக் சிங்கால் மடத்திற்குச் சென்று ஜெயேந்திர சுவாமிகள் மற்றும்விஜயேந்திர சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ராமர் கோவில் கட்டுவது தொடர்பாகத்தான் சுவாமிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

சமீபத்தில்தான் திடீரென்று இங்கு வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், காஞ்சி சுவாமிகளைச்சந்தித்து ஆலோசனை நடத்திச் சென்றார். ராமர் கோவில் விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாயின் தூதுவராகத்தான்பெர்னாண்டஸ் வந்தார் என்றும் கூறப்பட்டது.

ராமர் கோவில் கட்ட ஜெ. ஆதரவு:

இதற்கிடையே ராமர் கோவில் கட்டுவதற்கு அதிமு பொதுச் செயலாளரான ஜெயலலிதா தன்னுடைய ஆதரவைத்தெரிவித்துள்ளதாக வி.எச்.பியின் துணைத் தலைவரான ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் கூறினார்.

மேலும் இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் சம்மதிக்க வைப்பேன் என்று ஜெயலலிதாகூறியதாகவும் கிஷோர் இன்று சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+