அமெரிக்க நிருபர் கடத்தலில் ஜெய்ஷ் தலைவன்
இஸ்லாமாபாத்:
கராச்சியில் அமெரிக்க நிருபரான டேனியல் பேர்ல் கடத்தப்பட்டதில் ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற தீவிரவாதஅமைப்பின் ஒரு தலைவனான ஷேக் ஒமருக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
தீவிரவாதிகளுடன் டேனியல் பேட்டி எடுப்பதற்கு இந்த 3 பேரும்தான் உதவி வந்தனர். அவர்கள் கொடுத்ததகவலின் அடிப்படையில்தான் ஒமர் இந்தக் கடத்தலில் தொடர்புடையவன் என்று போலீசாருக்குத் தெரிய வந்தது.
டேனியல் துப்பாக்கி முனையில் உள்ள புகைப்படத்தை ஒமர்தான் தங்களிடம் கொடுத்ததாக இந்த 3 பேரும்கூறினர்.
டேனியல் கடத்தல் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரைக் கடத்தியவர்களை வெகுவிரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று சிந்து மாகாணத்தின் உள்துறை செயலாளரான முக்தர் அகமது ஷாகூறியுள்ளார்.
டேனியலைக் கடத்தியிருப்பதாக இ-மெயிலை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர்கள்போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.