இந்தியாவுக்கு அணுகுண்டு ஏந்திய புதிய ரஷ்ய நீர்மூழ்கி

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இந்தியா விரைவில் அணுகுண்டு ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த 2 நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவிடமிருந்துகுத்தகைக்கு (லீஸ்) வாங்கவுள்ளது.

இந்தியாவுக்கு இன்று (புதன்கிழமை) வந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் இல்யா கிளிபானோவ் இதற்கானஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார்.

இதற்கு முன் கடந்த 1988ம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனிடமிருந்து இந்தியா ஐ.என்.எஸ். சக்ரா என்றஅணுகுண்டு ஏந்திச் செல்லும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா வாங்கியுள்ளது.

இதுபோன்ற அணுகுண்டு ஏந்திச் செல்லும் நீர்மூழ்கிகளை இந்தியா தனக்குச் சொந்தமாகத் தயாரிக்கும் வரை இந்தரஷ்ய நீர்மூழ்கிகள் இந்தியாவிடம் இருக்கும் என்று லண்டனில் வெளியாகும் "ஜேன்ஸ்" என்ற பாதுகாப்பு வார இதழ்குறிப்பிட்டுள்ளது.

இந்தியா சொந்தமாக நீர்மூழ்கிகளைத் தயாரிப்பதற்காக சமீபத்தில் மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது என்றுகடற்படைத் தளபதி மத்வேந்திர சிங் கூறியுள்ளார்.

ரஷ்யா அளிக்கவுள்ள இந்த 2 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களும் வரும் 2004ம் ஆண்டு வரை இந்தியக் கடற்படைபணிகளில் ஈடுபடவுள்ளது.

இந்தியப் பெருங்கடலிலும் வங்காள விரிகுடாவிலும் சீனா நிறுத்தியுள்ள இதுபோன்ற நீர்மூழ்கிக் கப்பல்களுக்குச்சவால் விடுக்கும் விதமாகவே இந்தியாவும் இந்த 2 நீர்மூழ்கிகளை வாங்கி நிறுத்தவுள்ளது.

தற்போது இந்தியக் கடற்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐ.என்.எஸ். விக்ரந்த் என்ற போர்க் கப்பலுக்குப்பதிலாக 44,000 டன் எடைகொண்ட அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற புதிய விமானந் தாங்கிக் கப்பலைஇந்தியாவிற்குக் கொடுப்பதற்கான ஒப்பந்தத்திலும் கிளிபானோவ் கையெழுத்திடவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+