இந்தியா-பாக். பேசுவதற்கு உதவத் தயார்: அன்னான்
நியூயார்க்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவத் தயாராக இருப்பதாக ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோவி அன்னான் கூறியுள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் 2 நாடுகளும் எல்லையில் குவித்துள்ள தங்கள் படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதுஅவசியமாகிறது என்று கூறிய அன்னான், இதனால் அடுத்து வரும் நாட்களில் மற்றொரு போரைத் தவிர்க்கமுடியும் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளுக்குத் தான் பயணம் சென்று வந்தது குறித்து பாதுகாப்புக் குழுவில்உரையாற்றியபோது அன்னான் இவ்வாறு கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்வதுவரை எல்லையில் உள்ள படைகளை வாபஸ்பெறப் போவதில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருவதுகுறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனமான சி.ஐ.ஏயின் இயக்குநரான ஜார்ஜ் டெனட் நேற்றுதான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிப்பதற்காக அதை இந்தியா பெருமளவில்தாக்கத் தொடங்கினால், பாகிஸ்தான் பதிலுக்கு கோபத்துடன் இந்தியாவை அணுகுண்டால்தான் தாக்கும் என்றும்டெனட் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications