காவிரி ஆற்றை வணங்குவதில் ஒரு குழப்பம்
ஈரோடு:
காவிரி, பவானி மற்றும் அமுதா ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் பவானி கூடுதுறை பகுதியில் காவிரி ஆற்றைவழிபடுவதில் கோஷ்டிப் பூசல் நிலவுவதால் அங்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகள் நடைபெறவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் பவானி நகரில் காவிரி ஆற்றங்கரையில் பவானி கூடுதுறை உள்ளது. இங்குதான் பவானி,காவிரி மற்றும் அமுதா ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கின்றன.
இதில் அமுதா ஆறு கண்ணுக்குத் தெரியாத ஆறு. காவிரிக்கும், பவானிக்கும் கீழே இந்த ஆறு ஓடுவதாக வரலாறுகூறுகிறது.
இந்த மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடம்தான் பவானி கூடுதுறை. இங்கு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது.காவிரித் தாயை வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்த கோவில்.
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் போதெல்லாம் கோவிலுக்கு அருகே உள்ள காவிரிக் கரையில் தடபுடலாகவிசேஷ பூஜைகள் நடத்தப்படும்.
ஆனால் சமீப காலமாக இங்கு பூஜைகள் நடத்தப்படுவது இல்லை. இதற்குக் காரணம் உள்ளூரில் உள்ளசிலருக்கிடையே யார் பூஜையை நடத்துவது என்பதில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுதான்.
இதனால் தண்ணீர் கரைபுரண்டு ஓடியபோது பூஜை எதுவும் நடத்தப்படவில்லை. மேலும் தற்போது மேட்டூரில்அணை மூடப்பட்டு விட்டது. ஆற்றிலும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது.
இதையடுத்து பவானி கூடுதுறை பகுதியில் மிகவும் குறைந்த அளவே காவிரியில் தண்ணீர் ஓடுகிறது. இதனால்அங்கு பூஜை எதுவும் நடத்தப்படாமல் கூடுதுறையே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
காவிரித் தாய்க்கு நன்றி கூறி நடத்தப்படும் பூஜையை செய்யாமல் விடுவது நல்லதல்ல என்று ஊர்ப் பெரியவர்கள்ஆதங்கப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications