செக்ஸ் டாக்டருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
செக்ஸ் டாக்டர் பிரகாஷூக்கு ஜாமீன் வழங்க முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பெண்கள் மற்றும் இளைஞர்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து இன்டர்நெட்டில் உலவவிட்டது தொடர்பாகடாக்டர் பிரகாஷ் போலீசார் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரகாஷ் மீது போதைப் பொருள் வழக்கு, கொலை முயற்சி வழக்கு போன்ற வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்நிலையில் ஆபாசப் படம் தயாரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டாக்டர்பிரகாஷ், முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்படுவேன். அதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பிரகாஷ் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார், டாக்டர் பிரகாஷின் ஜாமீன் மனுவைதள்ளுபடி செய்தார்.
ஏற்கனவே ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் டாக்டர் பிரகாஷுக்கு ஜாமீன்மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications