கேரளாவில் ஸ்டிரைக்: கோவை எல்லையில் தவிக்கும் தமிழக வாகனங்கள்
கோயம்புத்தூர்:
கேரளாவில் அரசு ஊழியர்கள் 2வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்,கோயம்புத்தூர் எல்லைப் பகுதியில் தமிழகத்திலிருந்து அங்கு செல்ல வேண்டிய வாகனங்கள் பல கி.மீ. தூரத்திற்குநின்று கொண்டிருக்கின்றன.
தமிழகத்தைப் போலவே கேரள அரசும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் மடிகளில் கை வைத்துள்ளது. அவர்களுடைய பல்வேறு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து கேரள அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். நேற்று தொடங்கியஇந்த வேலைநிறுத்தத்தால் கேரளாவில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இன்றும் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இதற்கிடையே தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லவேண்டிய லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள்கோயம்புத்தூர் எல்லையில் உள்ள செக்-போஸ்ட்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
செக்-போஸ்ட்டுகளில் உள்ள வருமான வரி அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கேரளாவுக்குள்செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கான லாரிகள் பல கி.மீ. தூரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன.
அங்குள்ள வருமான வரி அலுவலர்கள் வந்து "ஓகே" சொன்னால்தான் தமிழக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்லமுடியும். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அங்கு நின்று தவித்துக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications