நக்கீரன் நிருபர் கைது: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் கைது விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் நேற்று (புதன்கிழமை) நக்கீரன் இணை ஆசிரியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் ஆத்தூரில் கடத்திச் செல்லப்பட்டது குறித்தும், அதிரடிப்படையில் இருந்தவிஜயகுமார் மற்றும் கர்நாடக அதிரடிப் போலீசார் அவரைத் தொடர் சித்தரவதை செய்தது குறித்தும் ஆசிரியர்கோபால் மற்றும் நிருபரின் மனைவி ஆகியோர் தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் கொடுத்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தேசிய மனத உரிமை கமிஷன், தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா மற்றும்தமிழக போலீஸ் டி.ஜி.பி. நெய்ல்வால் ஆகியோருக்கு ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ்அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications