வீரப்பனைச் சந்திக்க மீண்டும் காடு செல்லத் தயார்: நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

வீரப்பன் சரண் அடைய வைப்பது தொடர்பாக அரசு கேட்டுக் கொண்டால் மீண்டும் காட்டுக்குச் சென்று வீரப்பனைச்சந்திக்கத் தயாராக உள்ளதாக நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கு உறுதுணையாக இருந்த தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

பெரம்பலூர் சென்றிருந்த நெடுமாறன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வீரப்பனை சரண் அடையவைக்க முயற்சிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு, வீரப்பன் ஏற்கனவே ஒரு முறை சரண் அடைய முன்வந்தான். அதற்கு அவன் விதித்த நிபந்தனை பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்பதுதான். அதை அரசு ஏற்றிருந்தால் அப்போதே சரண் அடைந்திருப்பான்.இப்போது கூட அரசு கேட்டுக் கொண்டால் மீண்டும் காட்டுக்குச் செல்ல நான் தயார் என்றார்.

தொடர்ந்து, இதுவரை வீரப்பனைப் பிடிக்கும் முயற்சிக்காக தமிழக, கர்நாடக அரசுகள் ரூ. 300 கோடிவரைசெலவிட்டுள்ளன. இந்தப் பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல பணிகளைச் செய்திருக்கலாம். வீரப்பன்காட்டுப் பகுதியில் உள்ள மலை வாழ் மக்களின் நலனுக்காக இதை செலவிட்டிருக்கலாம் என்றார் நெடுமாறன்.

வீரப்பன் சரண் அடைவானா என்று அவரிடம் கேட்டபோது, அது குறித்து முன்னாள் டிஜிபி தேவாரம்தான் பதில்சொல்ல வேண்டும் என்றார் நெடுமாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+