மழைக்கு 2.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிப்பு
சென்னை:
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழையால் 2.25 லட்சம் ஏக்கர் நிலங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஊரகத் தொழில்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
இரு மாவட்டங்களிலும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர், பின்னர்பட்டுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசுகையில்,
தஞ்சை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவை முழுமையாக சேதமுற்றுள்ளன.இந்த வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதுதவிர சிறிதளவு சேதமடைந்துள்ளவீடுகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் 45,479 ஹெக்டேர் சம்பா பயிர் சேதமடைந்துள்ளது. திருவாரூரில் 40,000 ஹெக்டேர் சம்பாபயிர் பாதிப்படைந்துள்ளது.
மழை சேதங்கள் போர்க்கால அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு சீர் செய்யப்படும் என்றார்வைத்தியலிங்கம்.












Click it and Unblock the Notifications