அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்
சென்னை:
அரசு ஊழியர்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால்,இன்று (வியாழக்கிழமை) முதல் நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
பண்டிகை முன் பணம், போனஸ் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்இன்று முதல் காலவரையறையின்றி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 2 நாட்களாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
நேற்று மாலை 3 மணி முதல் 7 மணி வரை சென்னை கோட்டையில் நடந்த பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சர்பொன்னையன், தலைமைசெயலாளர் சங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள்கலந்து கொண்டனர்.
அரசின் நிதி நிலைமை சீரான பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
மேலும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பண்டிகை முன் பணம் வழங்கவும் அரசு ஒப்புக் கொண்டது.
இந்த ஒப்புதல்கள் அனைத்தையும் அரசிடமிருந்து எழுத்து மூலமாகப் பெற்றுக் கொண்ட பின்னர், ஸ்டிரைக் வாபஸ்பெறப்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications