"இந்தியா-பாக். இடையே அணு ஆயுதப் போர் வரலாம்"
வாஷிங்டன்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் வரக்கூடும் என்று அமெரிக்க உளவுநிறுவனமான சி.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றம் பெரும் அணு ஆயுதப் போராகவெடிக்கக் கூடும் என்றார் டெனட்.
கடந்த 1971ம் ஆண்டு இந்த 2 நாடுகளுக்கும் ஏற்பட்ட போரை விட தற்போது போருக்கான வாய்ப்புக்கள்அதிகரித்துள்ளன. ஆனால் போரின் விளைவை யோசிக்காமல் 2 நாடுகளும் வெளிப்படையாகவே போர் மிரட்டல்விடுத்துக் கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று டெனட் கூறினார்.
ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளதங்கள் படைகளை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று இந்தியா இப்போதும் கூறி வருவதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கக் கட்டடங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாகவும்டெனட் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த ஆண்டு செனட் கூட்டத்தின்போதே ஒசாமா பின் லேடன் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளின் சதித்திட்டங்கள் குறித்து எச்சரித்தேன். கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் கட்டடங்களைத் தாக்கினர் என்றுடெனட் கூறினார்.
இதையடுத்து நாம் ஆப்கானிஸ்தானில் உள்ள அந்தத் தீவிரவாதிகளை விரட்டியடித்துவிட்டாலும், இன்னும்அவர்கள் நம்மைத் தாக்குவதற்காகக் கூறிவைத்துள்ளனர் என்றார் டெனட்.












Click it and Unblock the Notifications