ரூ.3,000 கோடியில் ஆரம்பக் கல்வித் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ஆரம்பக் கல்வியறிவு இல்லாதவர்களே கிடையாது என்ற நிலையை உருவாக்க ரூ.3,000 கோடியில்புரட்சிகரமான புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.

தமிழக திட்டக் கமிஷன் உறுப்பினர் வசந்தி தேவி சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் வியாழக்கிழமைஇத்தகவலைத் தெரிவித்தார். அவர் கருத்தரங்கில் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ.3,000 கோடிஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. நிதியில் ஒரு பகுதியை மத்திய அரசு வழங்கும்.

இந்தத் திட்டத்தின்படி 8 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆரம்பக் கல்வி அறிவு இல்லாதவர்களே கிடையாது என்றுநிலை எட்டப்படும். 2010ம் ஆண்டு வரை இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அறிவொளி இயக்கங்களைப் போல கிராமங்கள் தோறும் குழுக்கள்அமைக்கப்படும். இந்தக் குழுக்களில் பெண்கள், உடல் ஊனமுற்றோர், ஆசிரியர் பயிற்சி பெற்றோர், ஆதரவற்றோர்ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கப்படுவர். இந்தக் குழுக்கள்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றப்போகின்றன.

திட்டத்திற்குத் தேவையான நிதி இந்தக் குழுக்களிடம் வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டத்தின் மூலம்ஆரம்பக் கல்வி பெறத் தகுதியான அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியறிவு புகட்டப்படும் என்று வசந்தி தேவிகூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+