"பன்னீரே நீடிக்கட்டும்": ஆண்டிப்பட்டியில் மாஜி திமுக அமைச்சர் "ஐஸ்"
சென்னை:
பன்னீர்செல்வமே தமிழக முதல்வராக நீடிக்கட்டும். ஒரு பெண்ணை முதல்வராக தேர்ந்தெடுத்து மாபெரும் தவறைச்செய்து விடாதீர்கள் என்று முன்னாள் திமுக அமைச்சரான பொன்முடி ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரசாரம்செய்தார்.
திமுக வேட்பாளர் வைகை சேகருக்கு ஆதரவாக பொன்முடி பிரசாரம் செய்தார். அப்போது, திமுகஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்தார்.
பின்னர் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா நிற்பது ஏன் என்பதற்கான சில காரணங்களையும் அவர்சொன்னார். பொன்முடி கூறுகையில்,
ஆண்டிப்பட்டி மக்கள் இளிச்சவாயர்கள், அப்பாவிகள் என்றும் அவர்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்றஎண்ணத்தில்தான் இங்கு போட்டியிடுகிறார் ஜெயலலிதா.
வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிட்டிருக்கலாமே?
ஆண்டிப்பட்டி மக்கள் விழிப்புடன் இருந்து ஜெயலலிதாவின் நினைப்பை தவிடுபொடியாக்க வேண்டும். உங்கள்மண்ணைச் சேர்ந்த பன்னீர் செல்வமே தல்வராக நீடிக்க வழி வகுக்க வேண்டும்.
ஒரு பெண்ணை, அதுவும் பிடிவாதப் போக்கு கொண்ட பெண்ணை முதல்வராகத் தேர்ந்தெடுத்து பெரும் தவறைச்செய்து விடாதீர்கள் என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications