அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள் வேண்டும்: இந்தியா
டெல்லி:
அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்க இந்தியா விரும்புகிறது பாதுகாப்புத்துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
அமெரிக்காவிடம் இருந்து நாங்கள் வாங்க விரும்பும் ஆயுதங்கள் பிற நாடுகளிடம் இருக்கக் கூடாது என்றுநினைக்கிறோம். பிற நாடுகள் அதைத் தயாரிக்கக் கூட நெடுநாட்கள் ஆக வேண்டும். அது போன்ற நவீனஆயுதங்கள் தான் இந்தியாவுக்கு வேண்டும்.
சமீப காலமாக இந்தியா- அமெரிக்கா இடையே பாதுகாப்புரீதியில் நட்புறவு பலப்பட்டு வருகிறது. இந்திய-அமெரிக்க ராணுவங்களும் விமானப் படைகளும் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
முன்பும் இந்தியா- அமெரிக்க இடையே பாதுகாப்புரீதியில் ஒப்பந்தம் இருந்தது. ஆனால், பனிப் போர் காலத்தில்அந்த உறவு சீர்குலைந்தது. அதே போல 1971ம் ஆண்டு இந்தியாவுடன் பாகிஸ்தான் போரில் ஈடுபட்டிருந்தபோதுதனது கடற்படையை பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க அனுப்பியது. இதனால் உறவு முழுமையாகசீர்குலைந்தது.
பின்னர் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியபோது இந்திய- அமெரிக்க உறவு முழு அளவில் கெட்டுப்போனது.
ஆனால், தீவிரவாதிகள் தாக்குதலையடுத்துத் தான் உலக நாடுகள் குறித்த தனது கண்ணோட்டத்தை அமெரிக்காமாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது. இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டுவிட்டது அமெரிக்கா.
இந்திய விமானப் படைக்கு போர் பயிற்சி விமானங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே போகிறது.இந்த விஷயத்தில் எனக்கு எரிச்சல் தான மிஞ்சியது. பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விமானங்களை விற்க பல நாடுகள் முன் வந்துள்ளன. அதே நேரத்தில் அந்த விமானத்தை வாங்க வேண்டாம், இந்தவிமானத்தை வாங்க வேண்டாம் என சில நாடுகளில் இருந்து அடையாளம் தெரியாத சிலரிடம் இருந்தும்கடிதங்கள் வந்து கொண்டுள்ளன.
இந்தியாவுக்கு நவீன விமானங்கள் கிடைக்கக் கூடாது என சில எதிரி நாடுகள் திட்டமிட்டு இந்த விஷயத்தில் புகுந்துவிளையாடி வருகின்றன. பழைய விமானங்களில் பயிற்சி மேற்கொண்டு அவை விபத்துக்குள்ளாகி நமது இளம்விமானிகள் பயிற்சியின்போதே சாக வேண்டும் என அந்த நாடுகள் நினைக்கின்றன என்றார் பெர்னாண்டஸ்.












Click it and Unblock the Notifications