ஜெ.வுக்கு எதிரான வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
லண்டனில் ஹோட்டல் வாங்கியது, வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது ஆகியவை தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக முதலாவதுதனி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிப்பதா அல்லது தனித் தனியே விசாரிப்பதா என்பதை முடிவு செய்வதற்காக பிப்ரவரி11ம் தேதி வரை விசாரணையை ஒத்தி வைப்பதாக தனி நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வக்கீல் எழுந்து, இந்த வழக்குகளை சேர்த்து விசாரிப்பதாஇல்லையா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திலிருந்து தனக்கு வியாழக்கிழமைதான் உத்தரவு வந்ததாகவும், எனவே அதுகுறித்து முடிவுசெய்ய கால அவகாசம் தேவை என்றும் கோரினார்.
மேலும், மற்றொறு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பெரியகுளம் எம்.பி. தினகரன் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில்குற்றப்பத்திரிக்கை இன்னும் தினகரனுக்குக் கிடைக்கவில்லை. இதனால் தினகரனால் வாக்குமூலம் அளிக்க முடியவில்லை என்றார்.
இந்த இரண்டு வழக்கறிஞர்களின் வாதங்களையும் ஏற்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் வழக்கு விசாரணையை 11ம் தேதி வரை ஒத்திவைத்துஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications