கொல்கத்தா தாக்குதல்: அன்சாரிக்கு 7 நாள் சிபிஐ காவல்

Subscribe to Oneindia Tamil

Farhan Malikடெல்லி:

கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையம் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அப்தாப் அன்சாரியை7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் உத்தரவிட்டது.

அமெரிக்க மையம் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அப்சாரியை நேற்று துபாய் போலீசார் சி.பி.ஐயிடம்ஒப்படைத்தனர். பின்னர் விமானம் மூலம் இவன் நேற்றிரவு டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டான்.

இந்நிலையில் இன்று பிற்பகல் டெல்லி பெருநகர நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அன்சாரிகொண்டுவரப்பட்டு நீதிபதி காமினி லா முன் நிறுத்தப்பட்டான்.

விசாரணையின் முடிவில், சி.பி.ஐ. போலீசாரின் வேண்டுகோளுக்கிணங்க அன்சாரியை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில்வைக்க நீதிபதி காமினி உத்தரவிட்டார்.

விசாரணைக்காக அன்சாரியை குஜராத்துக்குக் கொண்டு செல்லவும் நீதிபதி காமினி அனுமதி அளித்தார்.

கடந்த ஆண்டு குஜராத்திலும் ஹரியானாவிலும் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்கைப்பற்றப்பட்டன. இவற்றைக் கடத்தியதில் அன்சாரிக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும், இது தொடர்பாகஅவனை விசாரிக்கவே சி.பி.ஐ. போலீசார் அவனை குஜராத் கொண்டு செல்கின்றனர்.

விசாரணைக்குப் பின்னர் அன்சாரியை குஜராத்தில் உள்ள ரதம்பூர் மாஜிஸ்திரேட் முன்பாக வரும் 16ம் தேதி மாலை4 மணிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி காமினி உத்தரவிட்டார்.

மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் அன்சாரியை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.

குஜராத்தில் அவனிடம் சி.பி.ஐ. விசாரணை முடிந்த பிறகே, கொல்கத்தா போலீசாரிடம் அன்சாரி ஒப்படைக்கப்படஉள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+