ராமேஸ்வரம் கோவிலில் ஜோதிலிங்கம் கண்டெடுப்பு
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் உள்ள ஏகாந்தரமார் கோவிலில் ஸ்படிக வகையைச் சேர்ந்த ஜோதி லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஏகாந்தரமார் கோவில் 600 ஆண்டுகள் பழமையானது.இந்தக் கோவிலைச் சுற்றிலும் அமிர்தவாமி, பாபவிமோசனம் ஆகிய 5 தீர்த்தங்கள் உள்ளன.
பாபவிமோசன தீர்த்தத்துக்கு அருகில் இருந்த வில்வ மரத்திற்கு கீழே அக்னி உருவமாய் ஜோதி லிங்கமும்இருந்தது. இந்த லிங்கத்தை பக்தர்கள் வணங்கி வந்தனர். இந்த வில்வமரம் 100 ஆண்டுகளுக்கு முன் வேரோடுசாய்ந்து விட்டது.
ரயில் பாதை அமைப்புக்குப் பிறகு ராமேஸ்வரம் முக்கியத்துவம் பெற்றதால் இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்எண்ணிக்கை குறைந்தது. இதனால் இந்தக் கோவில் பராமரிப்பு இல்லாமல் போனது.
கடந்க ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த கோவில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. கோவிலில்சேதமடைந்த பகுதிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவில் பிரகாரத்தின் முற்புதர்களில் இருந்து ஜோதிலிங்கம் ஆராய்ச்சியாளர்களால்கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லிங்கம் பீடமில்லாமல் 80 செ.மீ. உயரமும், 60 செ.மீ. சுற்றளவும் கொண்டது.
தற்போது இந்த லிங்கம் கோவில் பிரகாரத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது. கற்பூர ஆரத்தி காட்டினால் ஏற்படும்ஒளியை இந்த லிங்கம் உள்வாங்கி எட்டு கோணங்களில் பிரதிபலித்து பிராகசமாய் ஜொலிக்கிறது.
100 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள இந்த ஜோதி லிங்கத்தை உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என்று கூட்டமாகவந்து வழிபடுகின்றனர்.












Click it and Unblock the Notifications