சென்னை பர்மா பஜார் வியாபாரிகள் போராட்டம்
சென்னை:
தங்கள் கடைகளில் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்று கூறி சென்னையில் உள்ள பர்மா பஜார்வியாபாரிகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (திங்கள்கிழமை) கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
கடந்த சனிக்கிழமை பர்மா பஜாரில் திடீர் சோதனை நடத்திய போலீசார், நூற்றுக்கணக்கான திருட்டுவி.சி.டிக்களைக் கைப்பற்றினர்.
திருட்டு வி.சி.டிக்களைக் கைப்பற்றியதோடு நில்லாமல் 6 கடைகளுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.
இதைக் கண்டித்து பர்மா பஜார் வியாபாரிகள் அன்றே கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
போலீசார் அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்று கூறி அவர்கள் இந்தக் கடையடைப்புப் போராட்டத்தை நேற்றும்நடத்தினர்.
இந்நிலையில் பர்மா பஜார் வியாபாரிகள் இன்று தொடர்ந்து 3வது நாளாகக் கடையடைப்புப் போராட்டத்தைமேற்கொண்டனர்.
போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதற்குத் தக்க பதில் அளிக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பர்மா பஜார் வியாபாரிகள் சங்கச் செயலாளர் காதர் மைதீன் நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications