நெல்லை: குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த கட்டட தொழிலாளி
திருநெல்வேலி:
மனைவியின் தவறான நடத்தையால் 3 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தை பின்னர் தானும்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ராஜா குடியிருப்பைச் சேர்ந்த கட்டிட கொத்தனார்மாரியப்பன் (36). இவரது மனைவி தெய்வானை (32). இவர்களுக்கு பேராச்சி (11), மீனா (8) என்ற மகள்களும்சுரேஷ் (6) என்ற மகனும் உள்ளனர்.
மாரியப்பனின் மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது.இதைத் தெரிந்துக் கொண்ட மாரியப்பன் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் தெய்வானைதிருந்தவில்லை.
சில தினங்களுக்கு முன்பு தெய்வானை கணவருடன் தகராறு செய்து விட்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மாரியப்பன் மாமனார் வீட்டுக்குச் சென்று தெய்வானையை அழைத்தும், அவர் வரவில்லை.
இதனால் மனமுடைந்த மாரியப்பன் கடந்த சனிக்கிழமை இரவு தன் 3 குழந்தைகளுக்கும் சாப்பாடு கொடுத்து விட்டுபிறகு அவர்களுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்து விட்டு பிறகு கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் மாரியப்பனும் வீட்டுக்குள்ளேயே தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம்குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications