பெங்களூரில் தமிழக தொழிலதிபர் கொலை
பெங்களூர்:
தமிழகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பெங்களூரில் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த மணி (30) என்பவர் பெங்களூரில் லட்சுமி நரசிம்மா ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ஒருநிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் பெங்களூர் மாருதி நகரில் வசித்து வந்தார்.
கடந்த 1998ல் நடந்த ரவுடி பிரகாஷ் கொலை வழக்கில் மணியை போலீசார் கைது செய்தனர். ஆனால் நீதிமன்றம்மணியை விடுதலை செய்தது.
மணிக்கும் கொலை செய்யப்பட்ட பிரகாஷின் கூட்டாளிகளுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மணியின் வீட்டிற்கு வந்த 8 பேர், அவரை வெளியேஅழைத்துச் சென்றனர்.
ஆனால் மறுநாள் காலை கமலா நகர், வாணி விலாஸ் கார்டன் பிராந்தி கடை அருகே மணி பிணமாகக் கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
மணியின் தலை மற்றும் கைகளில் கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டன. இதையடுத்து மணி கொலைசெய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக பிரகாஷின் கூட்டாளிகள் கொலை செய்தனரா அல்லது ரியல் எஸ்டேட் தொழில்மோதலில் யாராவது கொலை செய்திருப்பார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications