கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறையை திமுகவினர்தான் ரத்து செய்தனர்: பன்னீர்
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதிக்காக திண்டுக்கல் அருகே அரசு விருந்தில்லத்தில் 4 அறைகளை முன்பதிவு செய்த திமுகபிரதிநிதி ஒருவரே பின்னர் அந்த முன்பதிவை ரத்து செய்துவிட்டார் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்கூறினார்.
மதுரையில் பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
குடகனாற்றில் உள்ள தமிழக பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான விருந்தினர் இல்லத்தில் உள்ள 4 அறைகளைதிண்டுக்கல் நகர திமுக செயலாளரான எம். பக்ஷீர் அகமது முன்பதிவு செய்தார்.
வரும் 16ம் தேதி ஆண்டிப்பட்டியில் வைகை சேகரை ஆதரித்து கருணாநிதி பிரச்சாரம் செய்ய வருவதைமுன்னிட்டுதான் பக்ஷீர் அகமது இந்த அறைகளை முன்பதிவு செய்தார்.
பின்னர் பக்ஷீர் அகமதுவே திரும்பவும் வந்து தன்னுடைய முன்பதிவை ரத்து செய்துவிட்டுப் போய்விட்டார்.
இதுதான் உண்மை. அப்படியிருக்கும்போது, தமிழக அரசுதான் அந்த முன்பதிவை ரத்து செய்தது என்று திமுகவினர்கூறுவது பொய். எனவே இந்த முன்பதிவை ரத்து செய்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க முடியாது என்றார்பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications