20 தீவிரவாதிகளை ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தல்
டெல்லி:
20 தீவிரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா மீண்டும்வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட 20 தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 13ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு அந்த 20 தீவிரவாதிகளையும் தங்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பட்டியலை அனுப்பியது.
ஆனால் இதுவரை பாகிஸ்தான் இந்த 20 தீவிரவாதிகளையும் ஒப்படைப்பது குறித்து எந்த ஒரு நடவடிக்கையையும்மேற்கொள்ளவில்லை.
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் தாக்குதல் நடந்தது தொடர்பாக அப்தாப் அன்சாரி என்றதீவிரவாதியை கடந்த சனிக்கிழமை இந்தியாவின் சி.பி.ஐயிடம் துபாய் ஒப்படைத்தது.
அதே முறையைப் பின்பற்றி இந்த 20 தீவிரவாதிகளையும் உடனடியாக ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை இந்தியாதற்போது வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரான ஜலால் அப்பாஸ் ஜிலானி நேற்று (திங்கள்கிழமை)வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டார்.
அப்போது அந்த 20 தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று ஜிலானியிடம்வலியுறுத்தப்பட்டது.
தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்போ அடைக்கலமோ அளிக்கக் கூடாது என்று சர்வதேசச் சட்டம் தெளிவாகக் கூறியும்பாகிஸ்தான் அதை மதிக்காமல் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ்பின்னர் நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications