For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் போர்நிறுத்தம்: குறைந்து வரும் சிக்கல்கள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தம் வேண்டி தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் மேலும் சில மாறுதல்கள் செய்யவேண்டும் என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

ராணுவ ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளில் விடுதலைப்புலிகள் எந்தவிதமான ஆயுதத்தையும் வைத்துக் கொள்ளாமல்சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான தடைகளைமுற்றிலும் நீக்க வேண்டும் என்றும் புலிகள் கோரியுள்ளனர்.

இதையடுத்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்துடன் இதுகுறித்துவிவாதிப்பதற்காக நார்வே தூதுக் குழுவினர் மீண்டும் லண்டன் விரைந்துள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுதலைப்புலிகள் தங்களுடைய இறுதியான நிலையைத் தெளிவாக நார்வேகுழுவினரிடம் தெரிவித்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளுடன் பேசிய பிறகு நார்வே குழுவினர் மீண்டும் கொழும்புவுக்கு வந்து, இலங்கை அரசிடம்விவாதிக்க உள்ளனர். அதன்பிறகே நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கையெழுத்துப் போட்டால்தான்தானும் கையெழுத்திடப் போவதாக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த வாரம்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விடுதலைப்புலிகளும் இலங்கை ராணுவமும் அறிவித்த 2 மாத காலப் போர்நிறுத்தம் வரும் 24ம்தேதியுடன் முடிவடைகிறது.

அதற்கு முன்னதாகவே நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று விடுதலைப்புலிகளும்நார்வே குழுவினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை அதற்குள் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், வரும் 24ம் தேதிநள்ளிரவிலிருந்து மேலும் ஒரு மாதம் போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் நீடிப்பார்களா என்பது குறித்து இன்னும்எதுவும் தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X