இந்தியா-பாகிஸ்தான் பேச வேண்டும்: அமெரிக்கா
வாஷிங்டன்:
காஷ்மீர் பிரச்சனையைத் விரைவில் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தினார்.
அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் வெள்ளை மாளிகையில் நிருபர்களைச்சந்தித்த புஷ், 2 நாடுகளும் சீரியசாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றுதெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி நிலவும் வரை பாகிஸ்தானுக்கு உதவுவோம் என்றும் புஷ்கூறினார். 2 நாடுகளுக்குமிடையே விரைவில் அமைதியை நிலைநாட்ட முஷாரப்பும் நானும் உறுதி எடுத்துள்ளோம்என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் 2 நாடுகளும் கேட்டுக் கொண்டால் மட்டுமே இந்தக் காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுவோம் என்றும்புஷ் கூறிவிட்டார்.
தொடர்ந்து பேசிய முஷாரப், எல்லையிலிருந்து இந்தியா உடனடியாகப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.
படைகளை விலக்கிக் கொண்ட கையோடு பேச்சுவார்த்தைக்கும் வரவேண்டும் என்றும் இந்தியாவுக்கு முஷாரப்அழைப்பு விடுத்தார்.
ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாத வரை படைகளை விலக்கப்போவதும் இல்லை, பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என்று இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications