ஏற்காட்டில் ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா செடிகள் அழிப்பு
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைப்பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளைப் போலீசார்பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
ஏற்காடு மலைப் பகுதிகளில் ஏராளமான கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக சேலம் போலீசாருக்கு புகார்கள்வந்த வண்ணம் இருந்தன. இந்தச் செடிகளை அழிப்பதற்காக சேலம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்கதிட்டமிட்டனர்.
இதன்படி 40 போலீசார் ஏற்காடு சென்றனர். கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடங்களான கொம்புத்தூக்கு, கோவிலூர்போன்ற கிரமாங்களுக்கு சாலை வசதிகள் இல்லாததால் போலீசார் நடந்தே அங்கு சென்றனர்.
கஞ்சா செடிகளை அழிக்க முற்பட்டபோது அருகிலிருந்த கிராம மக்கள் ஒன்று கூடி போலீசாரை தாக்க முற்பட்டனர்.இதையடுத்து கஞ்சாவினால் ஏற்படும் தீமைகளையும், கஞ்சா பயிரிடுவது சட்டப்படி குற்றம் என்றும் போலீசார்அந்த மக்களுக்கு விளக்கிக் கூறினர்.
இதனால் மக்கள் கலைந்து சென்றனர். பிறகு போலீசார் அந்தச் செடிகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.
சுமார் 2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அழித்ததாகவும், அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல்இருக்கும் என்றும் போலீசார் கூறினர்.
கஞ்சா செடிகளை பயிரிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும்அரிவாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications