40 பள்ளி மாணவிகள் திடீர் கர்ப்பம்? - தர்மபுரியில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு டியூசன் சென்டரில் படித்து வந்த 40 மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக வந்ததகவலையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2மாணவிகள் ஒரு தனியார் டியூசன் சென்டரிலும் படித்து வந்தனர்.

சில பட்டதாரி இளைஞர்கள் அந்த டியூசன் சென்டரை நடத்தி வருகின்றனர். இந்த சென்டரில் 100க்கும் மேற்பட்டபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் படித்து வந்தனர்.

பள்ளி நேரம் முடிந்ததும் மாலை 4.30 முதல் 7 மணி வரை அந்த டியூசன் சென்டருக்குச் சென்று மாணவிகள்படிப்பது வழக்கம்.

இந்நிலையில் அந்த டியூசன் சென்டரில் படித்த 2 மாணவிகள் கர்ப்பம் அடைந்து, அவமானத்தால் தற்கொலைசெய்து கொண்டனர் என்ற தகவல் திடீரென்று வெளியாகியது.

இதையடுத்து அங்கு படித்த மற்ற சில மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியபோது, 40க்கும் மேற்பட்டமாணவிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. அந்த டியூசன் சென்டரை நடத்திய இளைஞர்கள்தான் தங்கள்"கைவரிசை"யைக் காட்டியுள்ளனர் என்று பொதுமக்கள் பரவலாகப் பேசிக் கொள்கின்றனர்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலமுக்கியப் பிரமுகர்கள் உயர் அதிகாரிகளிடம் வற்புறுத்தி வருவதாகவும் தெரிகிறது.

ஆனால் இதுகுறித்து எங்களுக்கு எதுவும் புகார்கள் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட யாராவது புகார் கூறினார்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+