நாமக்கல் மலை குகையில் சிக்கிய 2 சிறுவர்கள் மீட்பு
நாமக்கல்:
நாமக்கல் மலைக்கோட்டையில் ஏற முயன்று அங்குள்ள ஒரு குகைக்குள் சிக்கிய 2 சிறுவர்களைத் தீயணைப்புவீரர்கள் 6 மணி நேரப் போராட்டுத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர்.
நாமக்கல்லை அடுத்த சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும்கண்ணன் ஆகிய 2 சிறுவர்களும் நாமக்கல் மலைக்கோட்டையில் ஏற ஆசைப்பட்டனர்.
அதன்படி மலைக்கோட்டையில் ஏறி மலை உச்சிக்குச் செல்ல முடிவு செய்த அந்த 2 சிறுவர்களும் அதில் ஏறத்தொடங்கினர்.
ஆனால் பாதி மலையில் ஏறிய பிறகு அந்தச் சிறுவர்களின் எதிரே ஒரு குகை தென்பட்டது. எப்படியோ அந்தக்குகைக்குள் சென்றுவிட்ட 2 சிறுவர்களும் அதற்கு மேல் எப்படிச் செல்வது என்று தெரியாமல் முழித்தனர்.
இதையடுத்து அந்தக் குகைக்குள் இருந்தவாறு அந்த 2 சிறுவர்களும் தங்களைக் காப்பாற்றும்படி கூக்குரல்எழுப்பினர்.
அதைக் கேட்ட சிலர் குகைக்குள் எப்படிச் செல்வது என்று வழி தெரியாததால், உடனடியாகத் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களாலும் குகைக்குள் எப்படி அந்த 2 சிறுவர்களும் சென்றார்கள் என்றுவியந்தவாறே அடுத்தகட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன்படி மலையின் மேற்பகுதியில் கயிற்றைக் கட்டிக் கொண்டு அந்தக் கயிறு வழியாகக் கீழே இறங்கிக் குகையைஅடைந்து 2 சிறுவர்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சுமார் 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அந்த 2 சிறுவர்களும் பின்னர் அவர்களுடையபெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications