கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நிருபர்களிடம் பன்னீர்செல்பம் கூறியதாவது:

ஏற்கனவே திமுக அரசு 15 சதவீத இட ஒதுக்கீட்டை கிராமப்புற மாணவர்களுக்கு அளித்திருந்தது. ஆனால்கிராமப்புற மாணவர்களை மேம்படுத்துவதற்காக எங்கள் அரசு அந்த ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்தியது.

ஆனால் இந்த ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பால் இந்த ஆண்டுமாணவர்களுக்குப் பாதிப்பில்லை.

ஆனாலும் தமிழக அரசு தீவிரமாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்வோம்.

காவிரிப் பிரச்சனையைப் பொறுத்தவரையில் அளவுப் பிரச்சனைதான். அவர்கள் இவ்வளவு தண்ணீர் திறந்துவிட்டோம் என்கிறார்கள்.

ஆனால் மேட்டூருக்கு வந்து சேரும் அளவு வரவில்லை. இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைச் சரி செய்வதற்காகஒரு குழு அமைக்கச் சொல்லியிருக்கிறோம்.

இவ்விஷயத்தில் நடுநிலை வகித்து மாநில அரசின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது மத்திய அரசின்கடமையாகும் என்றார் பன்னீர்செல்வம்.

குடகனாறு அரசினர் விருந்தில்லத்தில் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறை ரத்து செய்யப்பட்டது குறித்து நிருபர்கள்கேட்டபோது, அப்பிரச்சனை முடிந்துவிட்டது என்றும் அது சிறிய பிரச்சனைதான் என்று பன்னீர்செல்வம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+