சென்னை: தன்னை வெட்டிய ரவுடியை மடக்கிப் பிடித்த பெண் போலீஸ் அதிகாரி
சென்னை:
சென்னையில் ஒரு ரவுடியைத் துரத்தியபோது, தன்னை அவன் வெட்டிய போதிலும் ஒரு பெண் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் அவனை மடக்கிப் பிடித்தார்.
பேசின் பிரிட்ஜ் போலீ"ஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, நேற்று (வியாழக்கிழமை)இரவு அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது முருகன் என்ற ரவுடி கையில் நீளமான பட்டாக் கத்தியுடன் மற்றொரு ரவுடியைத் துரத்திக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் முருகனை ராஜேஸ்வரி துரத்திச் சென்றார்.
அப்போது அந்த ரவுடியைப் பிடித்த முருகன், பட்டாக் கத்தியால் அவனை வெட்ட முயற்சித்தான். ஆனால்அதற்குள் பாய்ந்து சென்ற ராஜேஸ்வரி, அந்த ரவுடியை வெட்டவிடாமல் முருகனைத் தடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன், ராஜேஸ்வரியின் வலது கையில் அதே பட்டாக் கத்தியால் வெட்டினான்.இதனால் அவருடைய கையிலிருந்து ரத்தம் கொட்டியது.
ஆனாலும் விடாமல் முருகனை மடக்கிப் பிடித்த ராஜேஸ்வரி, அவனைப் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜேஸ்வரி, அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பிடிபட்ட ரவுடி முருகன், பல வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications