தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் மாற்றமில்லை: வாசன்
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தங்கள் முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்று தமாகாதலைவர் ஜி.கே. வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
ஆண்டிப்பட்டியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாலும் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறிஅதிமுக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதாலும் அங்கு நடைபெறவுள்ள தேர்தலைப் புறக்கணிப்பது என்றுகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தமாகாவும் முடிவெடுத்திருந்தது.
மேலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் நியாயமாகத் தேர்தல் நடக்காது என்பதால் அங்கு தங்களுடைய தொண்டர்கள்யாரும் வாக்களிக்கக் கூடாது என்றும் அக்கட்சிகள் உத்தரவிட்டிருந்தன.
இந்நிலையில் இன்று திருச்சியில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, ஆண்டிப்பட்டியில் தேர்தலைப்புறக்கணிப்பதாகக் கூறியுள்ள கட்சிகள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு தங்கள் தொண்டர்களைவாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுகுறித்து வாசனிடம் நிருபர்கள் கேட்டபோது, ஆண்டிப்பட்டியில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றஎங்களுடைய முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒத்த கருத்தாகத்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம் என்றும்வாசன் நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications