கொளச்சலில் பாலத்தின் மீது வெடிகுண்டு வீச்சு
கொளச்சல்:
கொளச்சலில் உள்ள ஒரு பாலத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அடையாளம் தெரியாத 2 பேர்நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிவிட்டுத் தப்பிவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொளச்சலையும் சைமன் காலனியையும் இணைக்கும் ஒரு நடைபாதைப் பாலம்உள்ளது.
இன்று அதிகாலை மோட்டார் பைக்கில் வந்த 2 பேர், இந்தப் பாலத்தில் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினர். அந்தவெடிகுண்டும் பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதையடுத்து சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ள மக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும்அடையாளம் தெரியாத அந்த 2 நபர்களும் தாங்கள் வந்த பைக்கிலேயே ஏறித் தப்பிவிட்டனர்.
இந்தக் குண்டுவீச்சு காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாலத்திற்கும் எந்தவிதமான சேதம் இல்லை.
கடந்த வாரம் இப்பகுதியில் 2 மீனவக் கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலின் எதிரொலிதான் இந்தக்குண்டுவீச்சு என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டு வீசியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications