மத்திய ரிசர்வ் போலீஸ் ஆண்டிப்பட்டி வருகை
தேனி:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் போலீசார் நேற்று (சனிக்கிழமை)ஆண்டிப்பட்டி வந்தடைந்தனர்.
ஆண்டிப்பட்டி தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பவேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்தன.
இதனால் பீஹார், ஒரிஸா, ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 13 கம்பெனிகள் அடங்கிய1,300 மத்திய ரிசர்வ் போலீசார் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் மூலம் மதுரை வந்தனர்.
பிறகு சிறப்பு பஸ் மூலம் ஆண்டிப்பட்டி வந்தடைந்தனர். ஒவ்வொரு மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலும் ஒருகமாண்டர், ஒரு உதவி கமாண்டர், ஒரு டி.எஸ்.பி. , 4 இன்ஸ்பெக்டர்கள், 8 சப் இன்ஸ்பெக்டர்கள், 120 போலீசார்உள்ளனர்.
இந்த மத்திய ரிசர்வ் போலீசார் இன்று முதல் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்கிடையில் ஆண்டிப்பட்டி தேர்தலுக்கான எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இன்றும், நாளையும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications