இந்துக் கோவில்களின் கொடிமரங்களுக்கு தங்க முலாம் பூசும் முஸ்லீம் தொழிலாளி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் இந்துக் கோவில்களின் கொடி மரத்துக்கு ஒரு முஸ்லீம் தொழிலாளி தங்க முலாம் பூசுகிறார்.
தொழிலுக்கு மதம் ஒரு தடையில்லை என்று உணர்த்தியிருக்கிறார் தாஜுதீன் (46) என்ற அந்த முஸ்லிம்தொழிலாளி.
கொடிமரத்துக்கு தங்க முலாம் பூசும் தொழிலை தன்னுடைய தந்தை அமீர்ஜானிடம் இருந்து தாஜுதீன் கற்றுக்கொண்டிருக்கிறார்.
இவர் இதற்கு முன்பு குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில் மற்றும் பழனியில் உள்ள முருகர் கோவில்களுக்குகொடிமரத்தை சுற்றி தங்க முலாம் பூசும் வேலை செய்து தந்துள்ளார்.
கோயம்புத்தூர் அய்யப்ப சேவா சங்கம் வரும் 24ம் தேதி தங்க கொடிமரம் ஒன்று செய்து அதைத் துவக்கி வைக்கஉள்ளது. இந்த தங்கக் கொடிமரம் செய்ய தாஜுதீனை அய்யப்ப சேவா சங்கம் அணுகியுள்ளது.
இது குறித்து தாஜுதீன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
இந்து மதத்தை சேர்ந்தவர்தான் இந்தக் கோவில் வேலையை செய்ய வேண்டும் என்று யாரும் தடை விதிப்பதில்லை.நானும் இதை ஒரு தொழிலாகத்தான் பார்க்கிறேன்.
இந்தக் கொடிமரத்திற்கு தங்க முலாம் பூசுவதற்கு 6.5 கிலோ தங்கம் தேவை. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம்ஆகும். இதை செய்து முடிக்க 40லிருந்து 45 நாட்கள் ஆகும்.
இந்தக் கொடிமரத்தைச் சுற்றி 10 அடுக்கு காப்பர் தகடுகளால் சுற்றி அதற்கு பிறகு தங்க தகடுகளால் முலாம் பூசவேண்டும். இந்த தங்கத்தின் மெருகு 100 வருடங்கள் ஆனாலும் போகாது என்று கூறினார் தாஜுதீன்.












Click it and Unblock the Notifications