தமிழகத்தில் பாலங்கள், சாலைகள் அமைக்க ரூ.71.5 கோடி நபார்டு வங்கி உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் கிராமப்புறங்களில் பாலங்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக நபார்டு வங்கி ரூ.71.5 கோடிநிதியுதவி அளிக்கவுள்ளது.
இந்த நிதியுதவி மூலம் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் 122 பாலங்கள் மற்றும் 40 சாலைகள் ஆகியவைநெடுஞ்சாலைத் துறையினரால் கட்டப்படும்.
இதன் மூலம் 461 கிராமங்களும் 223 சந்தை மையங்களும் இணைக்கப்படும். மேலும் இதனால் மொத்தம் 1,873கி.மீ. பயண தூரமும் குறையும்.
வரும் 2004 மார்ச் 31ல் இத்திட்டம் நிறைவு பெறும்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த நபார்டு வங்கியின் திட்டக் குழு இதற்கான ஒப்புதலை அளித்தது.












Click it and Unblock the Notifications