நேபாளம்: மாவோயிஸ்டுகளால் 53 பேர் படுகொலை
காட்மண்டு:
நேபாளத்தில் மாவோயிஸ்டு கலவரக்காரர்களால் 53 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நேபாள அரசுதெரிவித்துள்ளது.
மேலும் அக்காம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவோயிஸ்டுகள் திடீரென்று புகுந்து நடத்திய தாக்குதலில்மாவட்ட அதிகாரி மியோகன் சிங் கத்தாரி, உளவுத்துறை அதிகாரி லோக் ராஜ் மற்றும் அவருடைய மனைவிஉட்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
இதே போல் சர்லாஹி மாவட்டத்தில் நுழைந்த மாவோயிஸ்டுகள் லால்பான்டி செக்போஸ்டில் நடத்திய தாக்குதலில்5 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 6 மணி வரை அக்காம் மாவட்ட தலைமையகம் மாவோயிஸ்டுகளின்கட்டுப்பாட்டில்தான் இருந்தது. தகவல் அறிந்து வந்த சிறப்பு பாரா மிலிட்டரி படையினர் அவர்களைப்பிடிப்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால் அந்த பகுதி தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 40 மாவோயிஸ்டுகள் வரைகொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications