கருணாநிதியைப் புறக்கணித்த போலீசார்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரான ஜெயலலிதாவுக்கு விழுந்து விழுந்து பாதுகாப்பு கொடுத்தபோலீசார், பிரச்சாரத்திற்கு வந்திருந்த கருணாநிதியைக் கண்டுகொள்ளவே இல்லை.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள சில கிராமங்களில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியும்நேற்று தீவிரப் பிரச்சாரம் செய்தார்.
ஏற்கனவே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஜெயலலிதா செல்லும் கிராமங்களில் எல்லாம் 50 அடிக்கு ஒருபோலீசார் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தனர்.
மேலும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக ஆங்காங்கே நிற்கும் இடங்களில் சில போலீஸ் உயரதிகாரிகள்கூடஅவருடைய வேனைச் சுற்றிலும் உள்ள கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஆனால் கருணாநிதி பிரச்சாரம் செய்யச் செல்லும் கிராமங்களின் வழியில் மட்டுமில்லாமல் அவருடைய வேனைச்சுற்றிலும்கூட திமுக பிரமுகர்களும் தொண்டர்களும்தான் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தனர்.
கருணாநிதிக்காக அனுப்பப்பட்டிருந்த ஒருசில போலீசார்கூட சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டுதான்நின்றார்களே தவிர, அவருக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்ற அக்கறை சிறிதுகூட இல்லை.
தன்னுடைய பிரச்சாரத்தின்போது கருணாநிதி இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. முதல்வர்பதவியை இழந்தாலும்கூட போலீசார் இன்னும் அவர் சொல்படிதான் ஆடிக் கொண்டிருப்பதுபோலத் தெரிகிறதுஎன்று கருணாநிதி பலமுறை குறைகூறிக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications