பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக மார்ச் 20ல் போராட்டம்: ராமதாஸ்
திண்டுக்கல்:
சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றால், மார்ச்20ம் தேதி திருவாரூரில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டுக்கல் வந்திருந்த ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசு வெறும் ரூ.45 கோடி நிவாரணமேவழங்கியிருக்கிறது. கடலூரில் மட்டுமே ரூ.100 கோடி மதிப்புள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை என்றால், 4 மாவட்டவிவசாயிகளையும் அழைத்து திருவாரூரில் கண்டன போராட்டம் நடத்தப்படும்.
ஆண்டிப்பட்டி தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்திருப்பது நல்லதல்ல. அவர்கள் தங்களின் முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க முன் வர வேண்டும்.
கடந்த 9 மாத அதிமுக ஆட்சியில் எந்த நலத்திட்டத்தையும் அரசு அறிவிக்கவில்லை. எந்த துறையும்வளர்ச்சியடையவில்லை என்று ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications