பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக மார்ச் 20ல் போராட்டம்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றால், மார்ச்20ம் தேதி திருவாரூரில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டுக்கல் வந்திருந்த ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:

சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசு வெறும் ரூ.45 கோடி நிவாரணமேவழங்கியிருக்கிறது. கடலூரில் மட்டுமே ரூ.100 கோடி மதிப்புள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை என்றால், 4 மாவட்டவிவசாயிகளையும் அழைத்து திருவாரூரில் கண்டன போராட்டம் நடத்தப்படும்.

ஆண்டிப்பட்டி தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்திருப்பது நல்லதல்ல. அவர்கள் தங்களின் முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க முன் வர வேண்டும்.

கடந்த 9 மாத அதிமுக ஆட்சியில் எந்த நலத்திட்டத்தையும் அரசு அறிவிக்கவில்லை. எந்த துறையும்வளர்ச்சியடையவில்லை என்று ராமதாஸ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+